சென்னை : சட்ட கல்வி பயிற்சி மையங்களை தடை செய்து குற்ற நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மனுதாரர் குறிப்பிட்டுள்ள விளம்பரம் சட்ட கல்வி பயிற்சி மையம் மட்டுமே என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தமிழகத்தில் பல பயிற்சி மையங்கள் இருப்பதாக கூறி திலீபனின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.