×

கான்பூர் ரயிலில் குண்டு வெடிப்பு

புதுடெல்லி: உத்தரப் பிரதேசம் கான்பூர் அருகே கான்பூர்-பிவானி கலிந்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று இரவு லேசான குண்டு வெடித்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. உத்தரப் பிரதேசம் மாநிலம் கான்பூரிலிருந்து, பிவானிக்கு கலிந்தி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு புறப்பட்டது. இந்த ரயில் கான்பூரிலிருந்து 30 கி.மீ தூரம் உள்ள பரஜ்பூர் ரயில் நிலையத்துக்கு நேற்று இரவு 7.10 மணிக்கு வந்தது. அப்போது அந்த ரயிலின் பொதுப் பெட்டி கழிவறையில்  வெடிச்சத்தம் கேட்டது.

இதையடுத்து அந்த ரயிலில் கான்பூர் போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். பட்டாசு வெடிமருந்து மூலம் இந்த லேசான குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது தெரிந்தது. கழிவறையின் பிளைவுட் மட்டும்  சேதமடைந்திருந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அந்த இடத்தில் துண்டு பிரசரங்கள் கிடந்தன. அதில் ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பின் பெயரில் மிரட்டல் வாசகங்கள் இடம் பெற்றிருந்தது என கான்பூர் கூடுதல் டிஜிபி அவினாஷ் சந்திரா தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kanpur , Kanpur Rail, blast
× RELATED திருமணமான 2 மாதத்தில் தர்மசங்கடம்;...