2 நாள் பயணமாக தென்கொரியா புறப்பட்டார் மோடி

புதுடெல்லி: பிரதமர் மோடி 2 நாள் பயணமாக, நேற்று இரவு தென்கொரியா புறப்பட்டு சென்றார். பிரதமர் மோடி, நேற்று இரவு தென் கொரியா புறப்பட்டு சென்றார். இந்த பயணத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள அறிக்கையில், ‘‘ மேக்-இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, தூய்மை இந்தியா நடவடிக்கைகளில், முக்கிய பங்குதாரராக தென்கொரியா உள்ளது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் இரு நாடுகள் இடையே ஒத்துழைப்பு ஊக்குவிப்பதாக உள்ளது.

இந்தியாவும், தென்கொரியாவும், இணைந்து செயல்படுவது இரு நாடுகள் இடையேயான உறவையும், வளத்தையும், அமைதியையும் மேம்படுத்தும்’’ என குறிப்பிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: