தாம்பரம் ரயில் நிலையத்தில் சுற்றிய மூதாட்டி காப்பகத்தில் ஒப்படைப்பு

தாம்பரம்: தாம்பரம் ரயில் நிலையத்தில் ஆதரவற்ற நிலையில் சுற்றி திரிந்த மூதாட்டியை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். தாம்பரம் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ஆதரவற்ற நிலையில் சுற்றி திரிந்து வருவதாக தாம்பரம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்விக்கு தகவல் கிடைத்தது. ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியை விசாரித்தனர். அவர் தெலுங்கில் பேசினார். ஆனாலும் அவர் யார்? எங்கு இருந்து வந்தார்? பெயர் என கூற முடியாத நிலையில் இருந்தார்.  தாம்பரம் ரயில்வே போலீசார் அவரை மீட்டு போரூரில் உள்ள முதியோர் காப்பகத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து மூதாட்டியை காப்பகத்திற்கு அழைத்துச்சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: