துரைப்பாக்கம்: பெசன்ட் நகர் 29வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சரஸ்வதி (62). மருத்துவர். அடையாறில் சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வேலை முடிந்து இரவு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர், 1.15 லட்சம் உள்ள கைப்பை மற்றும் 7 சவரன் வளையலை வீட்டு ஜன்னல் ஓரம் உள்ள மேஜையில் வைத்துவிட்டு முதல் மாடியில் தூங்கினார். நேற்று காலை எழுந்து கைப்பையை பார்த்தபோது பணம் மற்றும் நகையை ஜன்னல் வழியாக மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சரஸ்வதி திருவான்மியூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.