×

இன்று முதல் மார்ச் 5ம் தேதி வரை சென்னை-ஆவடி ரயில்கள் ரத்து

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை-ராயபுரம் வழிதடத்தில் இன்று முதல் (21ம் தேதி) மார்ச் 5ம் தேதி வரை இரவு 11 மணி முதல் காலை 3 மணி வரை பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது.
இதனால் 24 மற்றும் மார்ச் 3 ம் தேதி இரவு 11.15 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து ஆவடி செல்லும் ரயில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. இதேப்போல் மறு மார்க்கத்தில் காலை 4.10 மணிக்கு ஆவடியில் இருந்து புறப்பட்டு கடற்கரை வந்து அடையும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.  இரவு 10.30 வேளச்சேரியில் இருந்து புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரயில் 22ம் தேதி முதல் மார்ச் 4ம் தேதி வரை (ஞாயிறு தவிர) கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படும்.

இதேப்போன்று மறு மார்க்கத்தில் காலை 4.10 மணிக்கு ஆவடியில் இருந்து புறப்படும் மின்சார ரயில்கள் ஆவடி-கடற்கரை வழித்தடத்தில் ரத்த செய்யப்பட்டு காலை 5.10 மணிக்கு கடற்கரையில் இருந்து புறப்படும். கும்மிடிப்பூண்டியில் இருந்து இரவு 9.40 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் 20ம் ேததி முதல் மார்ச் 4ம் தேதி வரை கொருக்குப்பேட்டை வழித்தடத்தில் இயங்காமல்  மூர் மார்க்கெட் வழியாக இயக்கப்படும். கடற்கரையில் இருந்து 1.20 மணிக்கும் புறப்படும் அரக்கோணம் மின்சார ரயில் 21ம் தேதி முதல் 5ம் தேதி வரை மூர்மார்க்கெட்டில் இருந்து 1.25 மணிக்கு புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai ,Avadi , Chennai-Avadi, trains canceled
× RELATED ஆவடி அருகே நகைக்கடைக்குள் புகுந்து...