×

தேர்தல் தொடர்பாக விவாதிக்க மதிமுக உயர்நிலை குழு பிப்.25ல் கூடுகிறது: வைகோ அறிவிப்பு

சென்னை: மதிமுக உயர்நிலைக்குழு கூட்டம் வரும் பிப்ரவரி 25ம் தேதி நடைபெறும் என்று வைகோ அறிவித்துள்ளார். இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

மதிமுக உயர்நிலைக்குழுக் கூட்டம் வரும் பிப்.25ம் தேதி காலை 11 மணிக்கு சென்னையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு கட்சியின் அவைத்தலைவர் திருப்பூர் சு. துரைசாமி தலைமை தாங்குகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக விவாதிக்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு நாடாளுமன்ற தொகுதி வாரியாக பிரசாரக்குழுவில் யார், யார் நியமிப்பது தொடர்பாகவும், விருதுநகரில் வைகோ மீண்டும் போட்டியிடுவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. 



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : meeting ,MDMK ,Vaiko ,election ,announcement , Election, the high profile of the MDG, Vaiko
× RELATED மதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு