இமாச்சலில் பனிச்சரிவு 6 ராணுவ வீரர்கள் பலி?

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் ராணுவ வீரர்கள் 6 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது. இமாச்சலப் பிரதேசத்தின் கின்னார் மாவ்டடத்தில் உள்ள இந்தியா-சீன எல்லையில் ராணுவத்தின் ஜம்மு-காஷ்மீர் ரைபிள்ஸ் படைப்பிரிவினர் மற்றும் இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படைப்பிரிவினர் பாதுகாப்பு பனியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சீன எல்லையில் உள்ள ஷிப்கலா என்ற இடத்தில் நேற்று காலை 11 மணியளவில் பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், ராணுவ வீரர்கள் 6 பேர் புதைந்தனர். இவர்களில் ஒருவர் உடல் மீட்கப்பட்டுள்ளது. மற்ற 5 வீரர்களும் பனிச்சரிவில் சிக்கி பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இவ்களின் உடல்களை தேடும் பணி நடக்கிறது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: