சென்னை சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு இன்று தொடக்கம் Feb 21, 2019 சிபிஎஸ்இ சென்னை: சிபிஎஸ்இ பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. சிபிஎஸ்இ என்னும் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத்திட்டத்தில் இயங்கும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இன்று முதல் பொதுத் தேர்வு தொடங்குகிறது. தேர்வில் பங்கேற்க நாடு முழுவதும் 18 லட்சத்து 19 ஆயிரம் மாணவ மாணவியர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் தொழிற்பாடப் பிரிவில் படிப்போருக்கான தேர்வு இன்று தொடங்குகிறது. முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் மார்ச் 7ம் தேதி தொடங்குகிறது.தேர்வு எழுத வரும் மாணவ, மாணவியர் தாங்கள் படிக்கும் பள்ளியின் அடையாள அட்டை, தேர்வுக்கான ஹால்டிக்கெட் ஆகிய இரண்டையும் கட்டாயம் தேர்வு மையத்துக்கு எடுத்து வர வேண்டும். ஹால்டிக்கெட்டில் பள்ளித் தலைமை ஆசிரியர் கையொப்பத்துடன், பெற்றோரின் கையொப்பமும் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று இந்த ஆண்டு புதிய முறையை சிபிஎஸ்இ அமல்படுத்தியுள்ளது. அதனால் பெற்றோர் கையொப்பம் இல்லாத ஹால்டிக்கெட் கொண்டு வரும் மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு மையங்களின் வாயில்கள் சரியாக 10 மணிக்கு மூடப்படும். அதனால் காலை 9.45 மணிக்குள் மாணவர்கள் தேர்வு மையத்துக்குள் வந்துவிட வேண்டும். 10.10 மணிக்கு கேள்வித்தாள் வழங்கப்படும். கேள்வித்தாள் படித்து பார்க்கவும், விடைத்தாள் முகப்பில் விவரங்கள் குறிக்கவும் 10 நிமிடங்கள் ஒதுக்கப்படுகிறது. 10.30 மணிக்கு விடை எழுதத் தொடங்க வேண்டும். காலை 10 மணிக்கு மேல் தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள் மாற்றியமைப்பு இன்று இரவு முதல் 7 மண்டலங்களில் 2 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: லாரிகள் மூலம் வழங்கப்படும் என குடிநீர் வாரியம் அறிவிப்பு
கள்ளச்சந்தையில் மது விற்றவரிடம் ₹50 ஆயிரம் கேட்டு தாக்கிய 3 போலீசார் சஸ்பெண்ட்: தாம்பரம் கமிஷனர் அதிரடி
கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான பாதைக்கு பாதிப்பு இன்றி 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்: ஆணையம் அனுமதி
கொலை செய்வதாக அடிக்கடி மிரட்டியதால் மது வாங்கி கொடுத்து ரவுடி படுகொலை: நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம்
தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி மோதல் அதிமுக நிர்வாகியின் மகனுக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி: வட்ட செயலாளர் கைது
சென்னை மாநகரில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க 3 மாதங்களில் கொள்கை முடிவு: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
கிளாம்பாக்கம்- செஞ்சிக்கு சென்றபோது கூடுதல் கட்டணம் வசூலித்த பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்: பொது மேலாளர் உத்தரவு
சென்னையில் சட்டம் ஒழுங்கு பிரச்னையின்றி அமைதியான முறையில் தேர்தல் ஓட்டு இயந்திரங்கள் வைத்துள்ள 3 இடங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் 4 அடுக்கு பாதுகாப்பு: போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்
ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு சில இடங்களில் ஓட்டு இயந்திரம் பழுது காரணமாக வாக்குப்பதிவு 1 மணிநேரம் தாமதம்: எம்பி, எம்எல்ஏக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்
இந்தியாவின் தலை எழுத்தை மாற்ற இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்வீர்: மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் பேச்சு
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று 2,970 சிறப்பு பேருந்து இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்