புல்வாமா தாக்குதல் என்ஐஏ வழக்கு பதிவு

புதுடெல்லி: கடந்த 14ம் தேதி நிகழ்ந்த புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்துள்ளது. காஷ்மீரில் கடந்த 14ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தை மோதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர், இதில் 40 வீரர்கள் இறந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்நிலையில் தேசிய புலனாய்வு அமைப்பு செய்தி தொடர்பாளர் கூறுகையில், “ புல்வாமா தாக்குதல் சம்பவம் குறித்து வழக்கு பதியப்பட்டுள்ளது. வழக்கை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது” என்றார். இதையடுத்து காஷ்மீர் போலீசார் வழக்கு ஆவணத்தை என்ஐஏ.யிடம் அளித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: