சென்னை கொடநாடு கொலை, கொள்ளையில் தொடர்புடைய சயான், மனோஜை 25ம் தேதி வரை கைது செய்ய தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு Feb 21, 2019 Saayan உச்ச நீதிமன்றம் கைது கொலை மனோஜ் கொடநாடு சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயான், மனோஜ் ஆகியோரை வரும் 25ம் தேதி வரை போலீசார் கைது செய்ய கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவின் காவலாளியை கொலை செய்து, அங்கு கொள்ளையடித்தாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து, சயான், மனோஜ் உள்பட பலரை கைது செய்தனர். பின்னர், இவர்கள் நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்தனர். இந்த நிலையில், இந்த கொலை, கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று இணையதளம் ஒன்றில் பேட்டியளித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து இவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. இந்த நிலையில் சயான், மனோஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமீனை ஊட்டி நீதிமன்றம் ரத்து செய்தது. அதன்படி போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர். இந்தநிலையில் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து இருவரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜராகி, ‘கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் விதிக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனைகளை மீறி சயான், மனோஜ் ஆகியோர் செயல்பட்டனர். முதலமைச்சருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஆவணப்படங்ளுக்கு பேட்டி அளித்துள்ளனர்’ என்றார். மேலும் அவர், ‘ஒரு வழக்கு ஏற்கெனவே நிலுவையில் இருக்கும்போது அதில் கைதான இருவரும் அதுகுறித்து பொதுவெளியில் பேசுவது என்பது நீதித்துறையின் அதிகாரத்தில் குறுக்கீடு செய்வது போலாகும். அவர்கள் இருவரும் சாட்சிகளை மிரட்டியதாகவும், ஆதாரங்களை கலைத்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது என்பதால் தான் அவர்களது ஜாமீனை ஊட்டி நீதிமன்றம் ரத்து செய்துள்ளது’ என்று வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, ‘ இந்த மனு தொடர்பாக வருகிற 25ம் தேதிக்குள் போலீசார் பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும். அதுவரை சயான், மனோஜ் ஆகியோரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபடக்கூடாது’ என்று இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தார். பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை சென்னை ஐசிஎப் தொழிற்சாலை தனியார் வசமாகிறதா?: 4000 காலி இடங்கள் நிரப்பப்படவில்லை
சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு மலேசியாவிலிருந்து கொண்டு வந்த அபூர்வ வகை கிளிகள் பறிமுதல்: பயணிகளுக்கு அபராதம் சுங்கத்துறையினர் அதிரடி
சாலையோர கடையில் விற்கப்பட்ட பிரிஞ்சியில் இறந்து கிடந்த பூரான் குழந்தைக்கு வாங்கிய தாய் அதிர்ச்சி: உணவு கட்டுப்பாட்டு அதிகாரிகள் விசாரணை
இன்சூரன்ஸ் இல்லாத ஆடி காரில் வந்து மனுதாக்கல் தென்சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ரூ.2,000 அபராதம்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை
மோடி ஆட்சியின் அவலத்தை குறிக்கும் வகையில் ஐந்தரை அடி உயரத்தில் மாதிரி வடை வைத்து நூதன பிரசாரம்: சமையல் கலை முன்னேற்ற சங்கம் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு
வடசென்னையில் வேட்புமனு தாக்கல் பிரச்னை குறித்து விசாரணை அறிக்கை கேட்கப்பட்டுள்ளது: மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தி.நகர் தொகுதியில் வளர்ச்சி பணிகள் கொண்டு வந்தேன்: தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் பேட்டி
பட்டா விஷயத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு 16 தாசில்தார்களுக்கு தண்டனை விதித்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை: சென்னை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவு
குடிநீர், கழிவுநீர் வரி செலுத்த 31ம் தேதி கடைசி நாள் வரும் ஞாயிற்றுக்கிழமை அனைத்து வரி வசூல் மையங்களும் இயங்கும்: வாரியம் அறிவிப்பு
தீவுத்திடலில் 70 நாள் நடந்த சுற்றுலா பொருட்காட்சி நிறைவு: 5.86 லட்சம் பேர் கண்டு ரசித்தனர்: சுற்றுலாத்துறை தகவல்