சொல்லிட்டாங்க...

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்: பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மோடி அரசு கடன் வழங்க மறுப்பது, அதன் நிர்வாகத்தை முடமாக்கி, கார்ப்பரேட் நிறுவனங்களை வளர்க்கும் நோக்கமே தவிர வேறில்லை.

பிரதமர் நரேந்திர மோடி; தீவிரவாதிகளும், அவர்களுக்கு ஆதரவு தருபவர்களும் தண்டிக்கப்பட வேண்டியது முக்கியமானது.

12.12.2018-ல் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே: ராகுல் காந்தியிடம் மிகவும் பணிவு காணப்படுகிறது. அவர் அரசியலில் பட்டம் வாங்கிவிட்டார். ஆனால், 5 மாநில தேர்தலில் தோற்ற பின்னரும் பாஜ தலைவர்கள் அகங்காரத்துடன் உள்ளனர்.

4.6.2017-ல் பாமக நிறுவனர் ராமதாஸ்: காருள்ளவரை, கடல் நீருள்ளவரை, பாருள்ளவரை, பைந்தமிழ் உள்ளவரை அதிமுக, திமுகவுடன் கூட்டணி கிடையாது. மேற்கில் சூரியன் உதிக்கும் வரை இவர்களுடன் கூட்டணி என்பது சாத்தியமே கிடையாது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: