இந்தியா மேகதாதுவில் புதிய அணை விவகாரம்: தமிழக அரசு பதில் மனு தாக்கல்...பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு Feb 21, 2019 உச்ச நீதிமன்றம் மத்திய அரசு விவகாரம் புது தில்லி புதுடெல்லி: மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள ஒப்புதலுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இதுபற்றி மத்திய அரசு, கர்நாடகா மற்றும் காவிரி நீர்மேலாண்மை ஆணையம் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் கன்வில்கர் மற்றும் அஜய் ரஸ்தோகி ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் நேற்று புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘‘நீர்வள ஆணையத்தின் அனுமதியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். கர்நாடகாவிற்கு நெட்கல் என்ற ஏரியிலிருந்து போதுமான குடிநீர் கிடைக்கிறது. அதனால் புதிய அணையும் கட்ட தேவையில்லை என அதில் குறிப்பிடப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,”மத்திய அரசு, கர்நாடகா, கேரளா தரப்பில் 3 வாரத்தில் தங்களது பதில்மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர். பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
சமூக நீதி கருத்தரங்கில் இந்தியா கூட்டணிகள் கட்சிகள் பங்கேற்பு..சமூக நீதிக்கான குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்கிறது: வில்சன்
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களின் தாலிக்கு ஆபத்து ஏற்படும்: தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பரபரப்பு பேச்சு
பாட்னாவில் நிதிஷ்குமாரின் கட்சி நிர்வாகி சுட்டுக்கொலை; தேர்தல் நெருங்கும் நேரத்தில் பீகாரில் பரபரப்பு
மஞ்சள் அலர்ட்!: தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!!
இந்தியாவில் தற்போதைக்கு டெஸ்லா தொழிற்சாலை இல்லை!..அமெரிக்காவிலேயே மலிவு விலை மின்சார கார்களை உற்பத்தி செய்ய எலான் மஸ்க் திட்டம்