எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த வழக்கு: நீதிமன்ற உத்தரவை மீறிய அனில் அம்பானி குற்றவாளி...பணம் செலுத்தாவிட்டால் சிறை

புதுடெல்லி: எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அனில் அம்பானி குற்றவாளி என தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், 4 வாரத்துக்குள் பாக்கி தொகையை செலுத்தாவிட்டால் 3 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.அனில் அம்பானி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்தார். எரிக்சன் நிறுவனத்துடன் இணைந்து இந்த நிறுவனம் செயல்பட்டது. நஷ்டம் ஆனதால் ரூ.45,000 கோடி கடன் சுமை ஏற்பட்டது. தொலைத்தொடர்பு துறைக்கு அலை வரிசை கட்டணம் ரூ.2,900 கோடி, எரிக்சன் நிறுவனத்துக்கும் ரூ.1,600 கோடி பாக்கி இருந்ததால், ஜியோ நிறுவனத்திடமும் விற்க முடியவில்லை. எரிக்சன் விவகாரத்தில் நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டு, ரூ.550 கோடியை பெற்றுக்கொள்ள எரிக்சன் சம்மதித்தது. ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்டும் நிலுவை தொகையை ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் தரவில்லை. இதனால் எரிக்சன் நிறுவனம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தது.

 இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்  தலைவர் அனில் அம்பானி, ரிலையன்ஸ் டெலகாம் தலைவர் சதீஷ் சேத், ரிலையன்ஸ்  இன்ப்ராடெல் தலைவர் சாயா விராணி ஆகியோர் நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளனர்.  அனில் அம்பானி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படுகிறது. கருவூலத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ரூ.118 கோடி செலுத்தியுள்ளது.இன்னும் 4 வாரத்துக்குள் மீதி ரூ.435  கோடியை எரிக்சனுக்கு தராவிட்டால் 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்படும். மேலும், ரிலையன்ஸ் டெலகாம், ரிலையன்ஸ் இன்ப்ராடெல் நிறுவனங்கள் தலா ரூ.1 கோடியை 4 வாரத்துக்குள் செலுத்தா விட்டால் மேலும் ஒரு மாதம் சிறைத்தண்டனை  விதிக்கப்படும் என தீர்ப்பளித்தது. 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: