உபி.யில் நிலநடுக்கம்

புதுடெல்லி: மேற்கு உத்தரப் பிரதேசத்தின் ஷாம்லி, பாக்பட் பகுதிகளில் நேற்று லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 4 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்க அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது டெல்லியில் வடக்கு பகுதியான பாக்பட் நகரை மையம் கொண்டு ஏற்பட்டது. இதனால் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிர், பொருட் சேதம் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, தஜிகிஸ்தானிலும் நேற்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகி இருப்பதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: