இந்தியா அதிகாலையில் ஷாப்பிங் மாலுக்கு வந்த சிறுத்தை Feb 21, 2019 பேரங்காடி தானே: மகாராஷ்டிராவில் அதிகாலை ஷாப்பங் மால், ஓட்டலுக்கு வந்த சிறுத்தையை பார்த்து பொதுமக்கள் அச்சமடைந்தனர். மகாராஷ்டிராவின் சமதா நகர் பகுதியில் கோரும் ஷாப்பிங் மால் அமைந்துள்ளது. இந்த மால் அருகே நேற்று அதிகாலை சிறுத்தை ஒன்று நடமாடியது. இதனை பார்த்த பொதுமக்கள், காவல் துறை மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அடுத்து போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்தனர். சுமார் 3 மணி நேரம் அந்த பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனால், எங்கு தேடியும் சிறுத்தை கிடைக்கவில்லை. இதனிடையே போக்ராம் சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் கீழ் தளத்தில் சிறுத்தை இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததால் உடனடியாக அங்கு விரைந்தனர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் சிறுத்தை இருக்கும் இடத்தை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். பின்னர் சிறுத்தையை பிடித்த அதிகாரிகள், அது சஞ்சய் காந்தி தேசிய பூங்காவில் விடப்படும் என்று தெரிவித்தனர். பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
தினமும் ரூ.400 தர காங்கிரஸ் வாக்குறுதி யால் பாஜ அச்சம் 100 நாள் வேலை பணியாளர்களுக்கு 4% முதல் 10% வரை ஊதிய உயர்வு: ஒன்றிய அரசு அறிவிப்பு
கெஜ்ரிவால் கைது பற்றி விமர்சித்த நிலையில் காங்கிரசின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து மீண்டும் அமெரிக்கா கருத்து
தலைமை நீதிபதிக்கு வக்கீல்கள் எழுதிய கடிதத்துக்கு ஆதரவு நீதித்துறையை பாதுகாப்பது போல் அதன் மீது தாக்குதல் நடத்தும் மோடி: காங்கிரஸ் கண்டனம்
கடந்த 10 ஆண்டுகள் அழிவு காலம் மோடி அரசை வேரோடு பிடுங்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர்: காங்கிரஸ் தாக்கு
காஷ்மீர் மக்களின் வலியையும், வேதனையையும் ராகுல்காந்தியால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்: மெகபூபா முப்தி உருக்கம்
கட்சி மாறுவதற்கு பாஜவினர் செல்போன் மூலம் வலைவீச்சு பஞ்சாப்பில் ஆபரேஷன் தாமரை தொடக்கம்: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி ஒடுக்க முயற்சி மோடி அரசால் ஜனநாயகத்துக்கு பெரும் ஆபத்து: பினராயி விஜயன்
பாஜவுக்கு எதிராக விளம்பரம் செய்த வழக்கு சித்தராமையா, டி.கே.சிவகுமார் நேரில் ஆஜராக வேண்டும்: பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் உத்தரவு
கெஜ்ரிவால் கைது குறித்து விமர்சித்த நிலையில் காங்கிரசின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து மீண்டும் அமெரிக்கா கருத்து: ஒன்றிய வெளியுறவு துறை கண்டனம்
ஆந்திராவில் வினோதம் ரதி மன்மதன் கோயிலில் பெண் வேடமிட்டு வழிபாடு செய்யும் இளைஞர்கள்: ‘குடும்ப நலம், ஆரோக்கியம் கிடைக்கும்’