அதிகாலையில் ஷாப்பிங் மாலுக்கு வந்த சிறுத்தை

தானே: மகாராஷ்டிராவில் அதிகாலை ஷாப்பங் மால், ஓட்டலுக்கு வந்த சிறுத்தையை பார்த்து பொதுமக்கள் அச்சமடைந்தனர். மகாராஷ்டிராவின் சமதா நகர் பகுதியில் கோரும் ஷாப்பிங் மால் அமைந்துள்ளது. இந்த மால் அருகே நேற்று அதிகாலை சிறுத்தை ஒன்று நடமாடியது. இதனை பார்த்த பொதுமக்கள், காவல் துறை மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அடுத்து போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்தனர். சுமார் 3 மணி நேரம் அந்த பகுதியில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனால், எங்கு தேடியும் சிறுத்தை கிடைக்கவில்லை. 

இதனிடையே போக்ராம் சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் கீழ் தளத்தில் சிறுத்தை இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததால் உடனடியாக அங்கு விரைந்தனர். நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் சிறுத்தை இருக்கும் இடத்தை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். பின்னர் சிறுத்தையை பிடித்த அதிகாரிகள், அது சஞ்சய் காந்தி தேசிய பூங்காவில் விடப்படும் என்று தெரிவித்தனர். 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: