அரசியல் பாகிஸ்தானை புகழ்ந்த சவுதி இளவரசரை வரவேற்பதா? மோடிக்கு காங்கிரஸ் கண்டனம் Feb 21, 2019 இளவரசன் சவூதி மோடி காங்கிரஸ் பாக்கிஸ்தான் புதுடெல்லி: சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை விமான நிலையத்திற்கு சென்று கட்டியணைத்து வரவேற்பதா என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.சவுதி அரேபிய நாட்டின் இளவரசர் முகமது பின் சல்மான் பாகிஸ்தானுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அரசு முறைப்பயணமாக சென்றிருந்தார். அப்போது இந்தியா, பாகிஸ்தான் இடையேயான அனைத்து முக்கிய பிரச்னைகளையும் பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணமுடியும் எனவும் தெரிவித்தார். இந்த நிலையில் காஷ்மீரின் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிபிஆர்எப் வீரர்கள் கொல்லப்பட்ட சில தினங்களில் சவுதி இளவரசர் இந்தியாவுக்கு பயணமாக நேற்று முன்தினம் இரவு வந்தார். அப்போது அவரை விமான நிலையத்திற்கே சென்று பிரதமர் மோடி வரவேற்றார். இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா தனது டிவிட்டர் பக்கத்தில், சவுதி இளவரசரை பிரதமர் மோடி கட்டியணைத்து வரவேற்பது போன்ற படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் தனது பதிவில் அவர், ‘பாகிஸ்தானின் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையை புகழ்ந்துள்ள சவுதி அரேபிய இளவரசர், அந்த நாட்டுக்கு ரூ.1.44 லட்சம் கோடியை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்துள்ளீர்கள் இதுதான் புல்வாமா தாக்குதலில் கொல்லப்பட்ட வீரர்களை நீங்கள் (மோடி) நினைவுகூரும் முறையா? ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க ஐநா.வை இந்தியா வலியுறுத்தி வரும் நிலையில் பாகிஸ்தானுக்கு ஆதரவானவரை கட்டியணைப்பதா?’ என கூறியுள்ளார். பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
விருதுநகர் காங். வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கக் கோரிய மனு மீது ஒருவாரத்தில் முடிவு எடுக்கப்படும் : தேர்தல் ஆணையம் உறுதி
பிரியங்கா பாட்டி போல அண்ணாமலை பாட்டியும் நகைகளை கொடுத்தாராம்: தகரப்பெட்டி ரகசியம் இதுதானா.. சமூக ஆர்வலர்கள் கேள்வி
ரூ.25,000 கோடி முறைகேடு வழக்கில் அஜித் பவார் மனைவி விடுவிப்பு: ‘வாஷிங் மெஷின்’ மீண்டும் வேலை செய்கிறது என எதிர்க்கட்சிகள் விமர்சனம்
அவதூறு பேசி ஆட்சிக்கு வர முயற்சி பிரதமர் மோடியின் பேச்சை அவரது நாக்கே நம்பாது: காதர் மொய்தீன் கண்டனம்
ஜாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது; 90% மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதே எனது வாழ்க்கை நோக்கம்: ராகுல் காந்தி உருக்கம்
தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா? கல்வித்துறை கண்காணிக்க வேண்டும்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்
மத கலவரம் நடத்தி வெற்றி பெற நினைக்கும் மோடி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம்: தேர்தல் ஆணையத்துக்கு ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை
மோடியின் சர்ச்சை பேச்சு விவகாரம்; போர் காலத்தில் பாட்டி நகை கொடுத்தார் தாய் ‘மாங்கல்யத்தை’ தியாகம் செய்தார்: பிரியங்கா காந்தி பதிலடி
முஸ்லிம்கள் குறித்து அவதூறாக பேசிய பிரதமர் மோடி மீது நடவடிக்கை: சென்னை போலீஸ் கமிஷனரிடம் எஸ்டிபிஐ கட்சி புகார்