மின் தடையால் நடுவழியில் நின்ற கோவை எக்ஸ்பிரஸ்

பள்ளிபாளையம்: கோவையில் இருந்த சென்னைக்கு நேற்று மாலை கோவை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது.  ஈரோட்டை கடந்த ரயில் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அடுத்த அலமேடு பகுதியில் 5.30 மணிக்கு வந்தபோது திடீரென நின்றது. டிரைவர் பரிசோதித்ததில், இன்ஜினுக்கு மின்சாரம் வரவில்லை என தெரியவந்தது. தகவலறிந்து ஈரோட்டிலிருந்து பொறியாளர்கள் வந்து ஆய்வுசெய்தனர். மின்சப்ளையை உடனடியாக சரிசெய்ய முடியவில்லை. இதையடுத்து சேலத்தில் இருந்து டீசல் இன்ஜினை வரவழைத்து,  மின்சார இன்ஜினுடன் இணைத்து இரவு 7.30 மணிக்கு கோவை எக்ஸ்பிரஸ் புறப்பட்டு சென்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: