பொன்.ராதாகிருஷ்ணன் தடாலடி பேட்டி மோடியை மீண்டும் பிரதமராக்க ஊழல் கட்சிகளோடு கூட்டணி

திருச்சி: பிரதமராக மீண்டும் மோடி வருவதற்காக ஊழல் செய்த கட்சிகளோடு மட்டுமில்லாமல் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைத்து கொள்வோம் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். கும்பகோணம் அருகே திருபுவனத்தில் கொலை செய்யப்பட்ட முன்னாள் பாமக நகர செயலாளர் ராமலிங்கம் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்துவதற்காக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று திருச்சி வந்தார்.முன்னதாக, திருச்சி விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி: அதிமுக, பாஜ, பாமக மெகா கூட்டணிக்கு அமோக வரவேற்புள்ளது. இந்த கூட்டணியில் மேலும் பல கட்சிகள் சேர வாய்ப்புள்ளது.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைவது குறித்து நல்ல செய்தி கிடைக்கும். தேமுதிக கூட்டணியில் இணைவது பற்றி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நேற்றிரவும் (நேற்றுமுன்தினம்) பேச்சுவார்த்தை நடந்தது. கூட்டணி முடிவில் இழுபறி இல்லை. பேச்சுவார்த்தை முடிந்து விபரம் கிடைத்ததும் முறையாக அறிவிப்போம். திருச்சி மட்டும் அல்ல. புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் பாஜ கூட்டணிதான் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர், கும்பகோணத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், `மத்தியில் மீண்டும் பிரதமராக மோடி வருவதற்காக மாநிலத்தில் ஊழல் செய்த கட்சியோடு மட்டுமில்லாமல் யாரோடு வேண்டுமானாலும் கூட்டணி வைத்து கொள்வோம்’ என்று கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: