சென்னை: அதிமுக ஆட்சி குரங்கு கையில் கிடைத்த பூமாலை என்று மிகவும் கடுமையாக விமர்சித்த பாமக மீண்டும் அவர்களுடன் கூட்டணி சேர்ந்திருப்பது கேலிக்கூத்தான செயல். இதில் யார் குரங்கு? யார் பூமாலை என்பதை அவர்கள் தான் விளக்க வேண்டும். திமுக எம்பி கனிமொழி, டெல்லியில் இருந்து நேற்று சென்னை வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுக, பாஜ கூட்டணியில் எத்தனை கட்சிகள் இணைந்தாலும் சரி, எந்த கட்சி இணைந்தாலும் சரி, அதனால் திமுக கூட்டணிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. எங்களுடைய கூட்டணி பலம் வாய்ந்தது. மக்கள் ஆதரவை பெற்றது. ஏற்கனவே குரங்கு கையில் உள்ள பூமாலை என கடந்தகால அதிமுக கூட்டணியை பாமக விமர்சித்துள்ளது. தற்போது, அதே பாமக, அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது.