நெல்லை: குமரி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் உடலில் கத்திக்குத்து பட்டது. இதில் நுரையீரல் பகுதியில் புகுந்து ஒடிந்து நின்ற கத்தியை நெல்லை அரசு மருத்துவமனை டாக்டர்கள் பாதுகாப்பாக அகற்றினர். நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் கண்ணன் அளித்த ேபட்டி: குமரி மாவட்டம் அழகப்பபுரத்தை அடுத்த புன்னார்குளத்தைச் சேர்ந்தவர் பாண்டித்துரை (36). அச்சக ஊழியர். இவர் கடந்த மாதம் 28ம் தேதி நெஞ்சில் கத்திக்குத்து ஏற்பட்டு கத்தி உள்ளேயே ஒடிந்து நின்ற நிலையில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதுகு பகுதியில் பாய்ந்த கத்தி நுரையீரலை காயப்படுத்தி இதயம் மற்றும் பெரிய ரத்த நாளங்களுக்கு மிக அருகில் இருந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அங்கிருந்து நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.