மதுரை: கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில் கைதான பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நேற்று ஜாமீனில் வெளியே வந்தனர். அப்ேபாது முருகன், ‘என் மீது போடப்பட்ட பொய் வழக்கை சந்திப்பேன்’ என தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த வழக்கில், பேராசிரியை நிர்மலாதேவி, அவருக்கு உடந்தையாக இருந்ததாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் முருகன், கருப்பசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இருவருக்கும் கடந்த 12ம் தேதி ஜாமீன் வழங்கப்பட்டது. இவ்வழக்கு நடைபெறும் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்துக்கு ஜாமீன் உத்தரவு நகல் கிடைக்காததால் இருவரும் விடுவிக்கப்படவில்லை.