×

புல்வாமா தாக்குதல் குறித்து என்ஐஏ அமைப்பு முதல் தகவல் அறிக்கை பதிவு

டெல்லி: காஷ்மீர் புல்வாமா பகுதியில் கடந்த பிப்.14-ல் நடந்த தீவிரவாத தாக்குதல் குறித்து என்ஐஏ அமைப்பு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. தேசிய புலனாய்வு அமைப்புதலைவர் யோகேஷ் சந்திரமோடி, மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தை இன்று பார்வையிட்டுள்ளனர்.  

தீவிரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பின்னர் தடயவியல் வல்லுனர்களும் அங்கு விரைந்து சென்று தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வெடிப்போருட்களின் அளவு மற்றும் வீரியம் தொடர்பான தடயங்களை சேகரித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு குறிப்புகளை அனுப்பி வைத்தனர். புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இயங்கி வரும் ஜெய்ஷ்-இ-முஹம்மத் தீவிரவதாக இயக்கம் பொறுப்பேற்று கொள்வதாக ஏற்கனவே அறிவித்தது.

இந்நிலையில் கிடைத்த தடயங்கள் மற்றும் ஆதாரங்களை சேகரித்து வந்த என்ஐஏ அமைப்பு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது. மேலும் தீவிரவாத தாக்குதல் குறித்து உளவுத்துறை அமைப்புகளும் ரகசிய விசாரணை நடத்தி வருவது தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : attack ,Pulwama , NIA Organization , First Information Report ,Pulwama attack
× RELATED போராட்டம் நடத்த இருந்த நிலையில்...