டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கி உள்பட 12 பொதுத்துறை வங்கிகளுக்கு மறுமூலதனமாக மொத்தம் ரூ.48,239 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வாராக்கடனால் நலிவடைந்துள்ள பொதுத்துறை வங்கிகளை சீரமைக்கும் நடவடிக்கையாக மத்திய அரசு மூலதனம் அளிக்கிறது. அதன்படி, கார்ப்பரேசன் வங்கிக்கு 9086 கோடி ரூபாயும், அலகாபாத் வங்கிக்கு 6896 கோடி ரூபாயும், பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு 5908 கோடி ரூபாயும், யுகோ வங்கிக்கு 3330 கோடி ரூபாயும் அளிக்கப்பட இருக்கிறது.