திருப்பத்தூர் அருகே புதிய கள்ளக்காதலனை கொலை செய்த பழைய கள்ளக்காதலன்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே புதிய கள்ளக்காதலனை கூலிப்படையை வைத்துக் பழைய கள்ளக்காதலன் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளது.  இந்நிலையில் விதவைப் பெண்ணான முருகேஸ்வரி என்பவருடன் கடந்த ஆண்டு சிவக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

பின்னர் சிவக்குமார்- முருகேஸ்வரி குடும்பம் நடத்திய வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று இரவு சிவக்குமார் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் அவரை கீழே தள்ளி மிளகாய் பொடியைத் தூவி சரமாரியாக வெட்டியுள்ளனர். பின்னர் அவரின் மர்ம உறுப்பை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது அதிர்ச்சி தகவல் வெளியானது.

பழனி என்பவருடன் முருகேஸ்வரிக்கு ஏற்கனவே பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் பழனி வேலைக்காக 3 மாதம் வெளியூர் சென்றுள்ளார். பழனி வெளியூர் சென்ற நிலையில் முருகேஸ்வரிக்கும் சிவக்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஊர் திரும்பிய பழனிக்கு, சிவக்குமார்- முருகேஸ்வரி இடையான கள்ளக்காதல் தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பழனி, சிவக்குமாரை கூலிப்படையை வைத்து கொடூரமாக கொலை செய்துள்ளளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: