சென்னை: அனைத்து கடலோர மாவட்ட மீனவர்களுக்கும் ஏன் டிரான்ஸ்பாண்டர்கள் வழங்க கூடாது? என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்துவது குறித்து சர்வதேச நீதிமன்றத்தை அணுக மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.