ஆட்சியை காப்பாற்றவே பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது அதிமுக: ஸ்டாலின் சாடல்

சென்னை: ஆட்சியை காப்பாற்றவே அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். வருகிற மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதி வரும் மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் பணியில் காங்கிரஸ், பாஜக போன்ற தேசிய கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இதுவரை அதிமுக-பாஜக-பாமக கூட்டணி அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டது. அதிமுக தலைமையிலான இந்த கூட்டணியில் பாமகவுக்கு 7 மக்களவை சீட்களும், ஒரு மாநிலங்களவை சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் பாஜகவுக்கு 5 சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த கூட்டணியில் தேமுதிகவை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தொகுதிப்பங்கீட்டில் இழுபறி நீடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், அதிமுக அரசை காப்பாற்றவே 21 தொகுதி இடைத்தேர்தலுக்கு பாமகவும், பாஜகவும் ஆதரவு அளித்துள்ளதாக கூறினார். மேலும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளவே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் பதவிநீக்கம் செய்யப்பட்டதாகவும், காலியாக உள்ள 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தாதது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் ஸ்டாலின் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: