சென்னை: சென்னையில் ஏ.டி.எஸ்.பி.க்கள் 2 பேரை பணியிடமாற்றம் செய்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு ஆயுதப்படைபிரிவு, சென்னை கூடுதல் காவல் கண்காணிப்பாளராக சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை போக்குவரத்து திட்டமிடல் பிரிவு கூடுதல் துணை ஆணையராக கோபால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.