சென்னை: ஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா பிறந்தநாளான வரும் 24ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். வரும் பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கி 28-ம் தேதிக்குள்ளாக அனைத்து ஏழை தொழிலாளர்களின் வங்கி கணக்குகளிலும் ரூ 2000 செலுத்த முடிவெடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.