சென்னை: அதிமுக - பாஜக - பாமக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் சேர வாய்ப்புள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். வருகிற மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேதி வரும் மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் பணியில் காங்கிரஸ், பாஜக போன்ற தேசிய கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இதுவரை அதிமுக-பாஜக-பாமக கூட்டணி அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டது. அதிமுக தலைமையிலான இந்த கூட்டணியில் பாமகவுக்கு 7 மக்களவை சீட்களும், ஒரு மாநிலங்களவை சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.