குடிபோதையில் செல்போனை பறித்த 2 பேர் கத்தியால் குத்திக் கொலை

திருச்சி: திருச்சி தேவதானம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் மகன் பிரகாஷ் (34); பெயிண்டர். இவர் நண்பர் ராஜ் என்பவருடன் அப்பகுதி டாஸ்மாக்கில் மது குடித்தனர். எதிரே  மெக்கானிக் கடையில் நின்றிருந்தனர். அப்போது ஆண்டார் வீதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெகநாதன்(32), அங்கு ஆட்டோவை நிறுத்தி விட்டு டாஸ்மாக் நோக்கி சென்றார். போதையில் இருந்த இருவரும் அவரை அழைத்து தகராறு செய்து மொபைல் போனை பறித்தனர். ஆத்திரம் அடைந்த ஜெனநாதன் கத்தியுடன் வந்து பிரகாஷ், ராஜ் இருவரையும் கத்தியால் குத்திக் கொன்றார்.  பின்னர் கோட்டை போலீசில் சரண் அடைந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: