ஆட்டோவில் கடத்தி வந்த 200 மதுபாட்டில்கள் பறிமுதல்: இருவர் கைது

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை அருகே ஆட்டோவில் 200 மதுபாட்டில்களை கடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர். தண்டையார்பேட்டை தண்டவராயன் தெருவில் நேற்று முன்தினம் இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒரு ஆட்டோவை மடக்கி சோதனை நடத்தினர். அதில், 200 மதுபான  பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர், ஆட்டோ டிரைவர் மற்றும் உடன் வந்தவரை பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், வண்ணாரப்பேட்டை கே.ஜி.கார்டன் 3வது தெருவை சேர்ந்த தியாகு (19), வீராகுட்டி தெருவை சேர்ந்த ராபின் (19) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஆட்டோவுடன் 200 மது  பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: