மதுரையில் உள்ள நகைப்பட்டறையில் 50 சவரன் நகை கொள்ளை...ஊழியர் கைவரிசை

மதுரை: மதுரையில் உள்ள  நகைப்பட்டறையில் 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மதுரை தெற்கு மாசி வீதியில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சபிகுல் என்பவற்றின் நகைப்பட்டறையில் 50 சவரன் நகை திருடப்பட்டுள்ளது.

இந்த நகைப்பட்டறையில் சில மாதங்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தை சேர்ந்த முகமது ஆசாத் ஃகாசி என்பவர்  வேலைக்கு சேர்ந்துள்ளார். நகைப்பட்டறை உரிமையாளர் சபிக்குலின் மகனுக்கு உடல்நிலை சரியில்லாததால் ஒரு வாரமாக கடையை முகமது ஆசாத் ஃகாசி திறந்து வந்துள்ளார். நேற்று காலை வெகு நேரம் ஆகியும் கடை திறக்கப்படாததால் வேறு சாவி மூலம் கடை திறந்துள்ளார்.

அப்போது கடையில் இருந்த 50 சவரன் நகைகளை திருடிக் கொண்டு முகமது ஆசாத் ஃகாசி தப்பியோடிய தெரிவியவந்தது. பின்னர் நகைப்பட்டறை உரிமையாளர் சபிக்குல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரை அடுத்து தெற்கு வாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது ஆசாத் ஃகாசியை வலைவீசி தேடி வருவது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: