வாஷிங்டன்: அமெரிக்கா-சீனா இடையே வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை இன்று மீண்டும் தொடங்குகிறது. இரு நாடுகளும் மாறி மாறி, இறக்குமதிப் பொருட்களுக்கு வரி விதிப்பை அதிகப்படுத்தி, வர்த்தகப் போரில் இறங்கின. இந்த வரி விதிப்பு நடவடிக்கைகள் மார்ச் 1ஆம் தேதி வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு, இரு நாடுகளும் பேச்சுவார்த்தையை தொடங்கின. வாஷிங்டனிலும், பெய்ஜிங்கிலும் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைதளில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.