இந்தியா போர் தொடுத்தால்...... பாகிஸ்தான் தக்க பதிலடி கொடுக்கும்: இம்ரான்கான் ஆவேசம்

லாகூர்: புல்வாமா தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றிய போது அவர் பேசியதாவது: புல்வாமா தாக்குதல் தொடர்பாக இந்தியா அரசு சாட்சி இல்லாமல் எங்கள் மீது குற்றம் சாட்டுகிறது. சவூதி இளவரசருடன் பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் இருந்ததால் இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்தேன். இந்திய அரசாங்கம் தகுந்த சாட்சியங்களை அளித்தால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்தியா எங்கள் மீது போர் தொடுக்க தயாரானால், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். போரை  தொடங்குவது மக்களின் கைகளில் தான் உள்ளது. போரினால் ஏற்படும் விளைவுகள் கடவுளுக்கு தான் தெரியும். பேச்சு வார்த்தை மூலம் தான் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். பாகிஸ்தான் மண்ணில் இருந்து யாரும் வன்முறையை பரப்புவது இல்லை. புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தான் எப்படி பொறுப்பாகும். புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம் சாட்டியிருப்பது தவறு.  புல்வாமா தாக்குதலால் பாகிஸ்தானுக்கு என்ன பயன் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: