புல்வாமா தாக்குதல் பற்றிய இந்திய குற்றசாட்டுக்கு பாகிஸ்தான் மறுப்பு

பாகிஸ்தான்: புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தான் எப்படி பொறுப்பாகும் என இம்ரான் கான் கேள்வி எழுப்பியுள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம் சாட்டியிருப்பது தவறு எனவும் கூறியுள்ளார். தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் புல்வாமா தாக்குதலால் பாகிஸ்தானுக்கு என்ன பயன் என்றும் இம்ரான்கான் கேள்வி எழுப்பினார். எந்தவித ஆதாரமும் இல்லாமல் பாகிஸ்தான் மீது இந்தியா குற்றம்சாட்டு என இம்ரான் கான் கருத்து தெரிவித்துள்ளார். ஆதாரங்களை இந்தியா அளித்தால் நிச்சயமாக அதன்மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கும் எனவும் இம்ரான்கான் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: