×

கடவூர் அருகே மாவத்தூர் ஏரியில் மணல் திருட்டு அதிகரிப்பு

கடவூர்: கடவூர் அருகே மாவத்தூர் ஏரியில் மணல் திருட்டு அதிகரித்து உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். கடவூர் வட்டத்தில் மாவத்தூர் மற்றும் பண்ணப்பட்டி ஆகிய இரண்டு ஏரிகள் உள்ளன. இதில் மாவத்தூர் ஏரி சுமார் 250 பரப்பளவு கொண்டது. இந்த ஏரியை நம்பி சுமார் 200 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. தற்போது தண்ணீர் இல்லாததால் வறண்டு போய் கிடக்கிறது. இதனை பயன்படுத்தி சிலர் குளத்து பகுதியில் உரிய அனுமதியில்லாமல் மணல் எடுத்து செல்வதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

இதற்கு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதில் மணல் எடுக்க வேண்டும் என்றால் பொதுப்பணித்துறையிடம் அனுமதி பெற்ற பின்பு தான் மணல் எடுக்க வேண்டும். ஆனால் இவர்கள் எந்தவொரு அனுமதியும் பெறாமல் மணல் மற்றும் செம்மண் அள்ளி செல்கின்றனர். இதற்கு சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே இனியாவது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா எனவும் எதிர்பார்க்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : lake ,Kadavur ,Mawathur , Kadavur, Mavattur Lake, Sand
× RELATED கடவூர், தோகைமலை பகுதியில்...