மதுரை: ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி பொருட்களை புளோரிடா ஆய்வக சோதனைக்கு உடனடியாக அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் எனவும் சிவகளை, பரம்பு ஆகிய இடங்களிலும் அகழாய்வு நடத்த தொல்லியல் துறைக்கு உத்தரவிடக்கோரி தொடரப்பட்ட இரு பொதுநல மனுக்களை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் இந்த உத்தரவை அளித்தனர். ஆதிச்சநல்லூரில் அகழாய்வு முடிந்து 16 ஆண்டுகள் இதுவரை அகழாய்வு அறிக்கை தாக்கல் செய்யவில்லை எனவும் தமிழகத்தில் எத்தனை இடங்களில் அகழாய்வு நடைபெறுகிறது என்றுன் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.