திருச்சி: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு நேற்றிரவு தனியார் விமானம் வந்தது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசார், திருச்சி விமான நிலையத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மலேசிய விமானத்தில் வந்திறங்கிய பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை அதிரடியாக சோதனையிட்டனர். அப்போது சிவகங்கையை சேர்ந்த பயணி குத்புதீன் மற்றும் 3 பெண் பயணிகள் ஆகியோரின் உடைமைகளை சோதனை செய்த போது அவர்கள் பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 4பேரிடமும் இருந்து ரூ.35.20 லட்சம் மதிப்புள்ள 1,100 கிராம் தங்க நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் கடத்தல் நகைகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.