×

குழந்தை கடத்தலை தடுக்க வலியுறுத்தி டெல்லி இளைஞர் நடைபயணம் : ராமேஸ்வரத்தில் விழிப்புணர்வு பிரசாரம்

மண்டபம்: குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், குழந்தைகள் கடத்தல் சம்பவங்களை தடுக்க வலியுறுத்தி காஷ்மீரில் இருந்து விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ளும் டெல்லி இளைஞர் நேற்று ராமேஸ்வரம் வந்தார். டெல்லியைச் சேர்ந்தவர் ஆசிஷ் சர்மா. பொறியாளரான இவர், குழந்தைகள் பிச்சை எடுக்கும் முறையை ஒழிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி காஷ்மீர் உதம்பூர் நகரிலிருந்து 2017, ஆகஸ்ட் 27ம் தேதி கையில் தேசிய கொடியை ஏந்தியபடி நடைபயணம் புறப்பட்டார்.

இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் வழியாக தமிழகம் வந்த இவர் நேற்று ராமேஸ்வரத்திற்கு வந்தார். இந்தியாவில் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், குழந்தைகள் கடத்தல் சம்பவங்களை தடுக்க வலியுறுத்தியும், குழந்தைகள் பிச்சை எடுப்பதை தடுக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த நடைபயணம் செல்வதாக தெரிவித்தார். இதுவரை 15 ஆயிரத்து 539 கிமீ நடந்துள்ளதாகவும் தனது பயணம் அந்தமான் நிகோபார் தீவில் மார்ச் 6ம் தேதி முடிவடைய உள்ளதாகவும் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : kidnapping ,Rameswaram , New Delhi, Rameswaram, awareness
× RELATED பஞ்சாப்பில் வழிப்பறியில் ஈடுபட்ட நைஜீரியா, கானா நாட்டு பெண்கள் கைது