×

விழுப்புரம் அருகே போலீஸ் ஜீப் மோதி 3 பேர் பரிதாப சாவு: போலீஸ்காரர் சஸ்பெண்ட்

விழுப்புரம்: விழுப்புரம் அருகே 2 பைக்குகள் மீது போலீஸ் ஜீப் மோதியதில் 3 பேர் பலியாகினர். இதுதொடர்பாக ஆயுதப்படை போலீஸ்காரரை சஸ்பெண்ட் செய்து எஸ்பி உத்தரவிட்டுள்ளார். விஐபி பாதுகாப்புக்கு சென்ற விழுப்புரம் காவல்துறை ஜீப் நேற்று முன்தினம் மாலை புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்துக்கு வந்துகொண்டிருந்தது. விழுப்புரம் காகுப்பம் ஆயுதப்படை போலீஸ் டிரைவர் சரவணன் ஜீப்பை ஓட்டி வந்தார். கெங்கராம்பாளையம் மதுவிலக்கு சோதனைச்சாவடி அருகே  டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த போலீஸ் ஜீப், தறிகெட்டு ஓடியது. அப்போது எதிரே வந்த 2 பைக் மீது மோதிய ஜீப், சாலையோரம் சைக்கிளுடன் நின்ற மாங்குப்பத்தை சேர்ந்த மண்ணாங்கட்டி (60) என்பவர் மீதும் மோதி பள்ளத்தில் இறங்கி நின்றது. இதில் மண்ணாங்கட்டி, ைபக்கில் வந்த கொண்டங்கியை சேர்ந்த பாபு(30), மற்றொரு ைபக்கில் வந்த திருமுருகன்(30) ஆகிய 3 பேர் பலியானார்கள். இதனைத்தொடர்ந்து போலீஸ்காரர் சரவணனை வளவனூர் போலீசார் கைது செய்தனர். அவரை சஸ்பெண்ட் செய்து எஸ்பி ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Police jeep crash ,Villupuram , Villupuram, police jeep, policeman, suspended
× RELATED கோயில் வரவு, செலவு கணக்கு கேட்டதால்...