சென்னை: கேரளாவை சேர்ந்தவர் சுரேஷ் (38). இவர், உறவினர் இல்ல திருமணத்திற்காக தனது குடும்ப உறுப்பினர்கள் 46 பேருடன் நேற்று முன்தினம் ரயில் மூலம் சென்னை வந்தார். பின்னர் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே தனியார் விடுதியில் 46 பேருடன் அறை எடுத்து தங்கி இருந்தார்.அப்போது, விடுதியின் வரவேற்பு அறையில் சுரேஷ் அமர்ந்திருந்த போது, அங்குள்ள பெரிய டி.வி.யில் விடுதியின் உள்ளே பொருத்தப்பட்டுள்ள கேமராக்களின் பதிவு ஓடிக் கொண்டிருந்தது. அதில் ஒரு கேமரா பதிவில் தனது உறவினர் பெண் ஒருவர், அறையில் உடைமாற்றும் காட்சி ஓடிக்கொண்டிருந்தது. இதை பார்த்த சுரேஷ் அதிர்ச்சியடைந்தார். உடனே விடுதி வரவேற்பு அறையில் இருந்த ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் சுரேஷ் சம்பவம் குறித்து ஆதாரங்களுடன் பெரியமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.