கார் மோதி பள்ளி மாணவன் பலி

சென்னை: குரோம்பேட்டை, லட்சுமிபுரம், மேட்டு தெருவை சேர்ந்த மணிகண்டன் (11).,  குரோம்பேட்டை அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான். இச்சிறுவன்  கடைகளில் பேப்பர் போடுவதற்காக சைக்கிளில்  குரோம்பேட்டை அருகே நேற்று  அதிகாலை சாலையை கடந்தபோது, கார் மோதி இறந்தான்.

* அடையாறு, பெசன்ட் அவென்யு சாலையில் நேற்று காலை  சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் சடலமாக கிடந்தார். போலீசார், சடலத்தை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும்  வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார் என விசாரிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: