புதுடெல்லி: இடைக்கால பட்ஜெட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மக்களவை தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில், கடந்த 1ம் தேதி மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதில், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில், வக்கீல் மனோகர் லால் சர்மா என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘‘அரசியலமைப்பின்படி, ஆண்டு முழு பட்ஜெட் மற்றும் செலவு கணக்கு கோரிக்கையை மட்டுமே மத்திய அரசு கொண்டு வர முடியும். எனவே, அரசியலமைப்பில் இடம் பெறாத இடைக்கால பட்ஜெட்டை ரத்து செய்ய வேண்டும்’’ என கூறி இருந்தார்.