யு மும்பா வாலி அபார வெற்றி

சென்னை: புரோ வாலிபால் லீக் தொடரின் அரை இறுதியில் விளையாட யு மும்பா வாலி அணி தகுதி பெற்றது. நேரு உள்ளரங்கில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் அகமதாபாத் டிபண்டர்ஸ் அணியுடன் மோதிய  யு மும்பா வாலி அணி, 10-15 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கியது. எனினும், அடுத்த செட்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய யு மும்பா வீரர்கள் 15-12, 15-13, 15-12, 15-8 என தொடர்ச்சியாக  வெற்றிகளைக் குவித்து 4-1 என்ற செட் கணக்கில் அகமதாபாத் அணியை வீழ்த்தினர்.லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களைப் பிடித்த கோழிக்கோடு ஹீரோஸ் (11), கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் (8), சென்னை ஸ்பார்டன்ஸ் (4),  யு மும்பா வாலி (4) அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின. இன்று நடைபெறும் முதல் அரை இறுதியில் கோழிக்கோடு ஹீரோஸ் - யு மும்பா வாலி அணிகளும், நாளை 2வது அரை இறுதியில் கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ் -  சென்னை ஸ்பார்டன்ஸ் அணிகளும் மோதுகின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: