ஹகுயி: பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட இந்தியரான ஜாதாவுக்கு சட்ட உதவி மறுக்கப்பட்டுள்ளது. ஜாதாவுக்காக வாதாடுவதற்கு வக்கீலை கூட பாகிஸ்தான் அரசு நியமிக்கவில்லை என இந்திய தரப்பில் வாதிடப்பட்டது. ஜாதாவுக்கு இந்தியத் தூதரகத்தின் உதவியை மறுத்ததற்கான காரணத்தை பாகிஸ்தான் தெரிவிக்கவில்லை எனவும், இந்திய தூதரக உதவியை பாகிஸ்தான் மறுத்தது சட்டவிரோதம் என்றும் வழக்கறிஞர் சால்வே வாதிட்டார்.