×

புல்வாமா தாக்குதலை அரங்கேற்றிய 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: பாதுகாப்புப்படை அதிரடி

புல்வாமா: புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர்கள் இருவரையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்று பதிலடி கொடுத்துள்ளனர். காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பிப்ரவரி 14-ம் தேதியன்று ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்புப்படை வீரர்கள் 44 பேர் வீரமரணம் அடைந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாதுகாப்பு படையினர் என்கவுன்டர் நடத்தினர். புல்வாமா மாவட்டம் பிங்லான் பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இருவரும் புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் முக்கிய காமாண்டோக்களான கம்ரன் மற்றும் காஸி என்பது தெரியவந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சண்டையில் ராணுவ மேஜர் உள்ளிட்ட 4 பாதுகாப்புப்படை வீரர்கள் வீரமரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : terrorists ,attack ,Pulwama ,Security Force , Security Force, Terrorists, Pulwama Attack, Jaish-e-Mohammed
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...