×

மாந்திரீக பூஜை செய்த பூசாரி அடித்துக்கொலை

தா.பேட்டை :  திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள குரும்பலூரை சேர்ந்தவர் வெங்கடேஷ் (45). இவரது மனைவி செல்லம்மாள், மருமகன் பிரகாஷ், மகன் பாலமுருகன், மகள் மீனா  ஆகியோர் நேற்று பச்சமலைக்கு பூசாரி ஒருவரை பார்ப்பதற்காக வாகனத்தில் சென்றனர். மனநிலையும், உடல்நிலையும் சரியில்லாமல் இருந்த வெங்கடேஷ் பிரச்னையை சரி செய்வதற்காக பச்சமலையில் உள்ள வண்ணாடு வாலையூரில் பூசாமி பொன்னுசாமி (60) வீட்டுக்கு சென்றனர். நேற்றிரவு பூசாரியின் வீட்டில் தங்கியிருந்த வெங்கடேஷ் திடீரென அலறியபடி குடும்பத்தினரை சரமாரியாக அடித்துள்ளார். சத்தம் கேட்டு  வந்த பொன்னுசாமி வெங்கடேசை பூஜை அறைக்குள் அழைத்துச் சென்றார்.

மாந்திரீக பூஜை மூலம் அவரை கட்டுப்படுத்த முயன்றபோது வெங்கடேஷ் அங்கிருந்த கட்டையை எடுத்து பூசாரி பொன்னுசாமியின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்த பூசாரி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து துறையூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே பூசாரி பொன்னுசாமியை கொலை செய்த வெங்கடேசுக்கு அப்பகுதி மக்கள் தர்ம அடி கொடுத்தனர். இதில் அவர் காயமடைந்தார்.  துறையூர் போலீசார் பூசாரி பொன்னுசாமியின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : priest , priest,committed,ritual puja,murder
× RELATED கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை...