புதுடெல்லி: ஈரானில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி கடந்த மாதத்தில் குறைந்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா தடை விதித்தாலும், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு மட்டும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. இதன்படி மாதம் ஒன்றுக்கு 1.25 மில்லியன் டன் மட்டுமே இறக்குமதி செய்ய முடியும். அதாவது, சராசரியாக நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பேரல் மட்டுமே இறக்குமததி செய்யலாம். ஆனால் ஜனவரி மாதத்தில் இதை விட குறைவாக 2,70,500 பேரல் கச்சா எண்ணெய் மட்டுமே இந்தியா இறக்குமதி செய்துள்ளது. கச்சா எண்ணெய் தாமதமாக வந்ததால்தான் இறக்குமதி அளவு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.