×

ஆந்திராவில் இருந்து கடத்திய 44 கிலோ கஞ்சா பறிமுதல்

வேலூர்: போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீசார் நேற்று முன்தினம் காட்பாடி ரயில் நிலைய பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காட்பாடி ரயில் நிலைய பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில் கையில் 2 மூட்டைகளுடன் நின்றிருந்தவரை பிடித்து சோதனையிட்டனர். இதில் 44 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. விசாரணையில், அவர் போடியை சேர்ந்தமுத்துவீரன்(41) என்பதும், ஆந்திராவில் இருந்து தேனிக்கு கஞ்சாவை கொண்டு செல்ல முயன்றதும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Andhra , Ganja,seized,Andhra Pradesh,kidnapping
× RELATED ஆந்திர முதல்வர் மீது கல்வீச்சு: துப்பு கொடுத்தால் சன்மானம்